tamilnadu

img

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணிக்கு பாரத ரத்னா வழங்க ஆந்திரா முதல்வர் கோரிக்கை

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் திரையிசை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அனைத்து திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் கோடிக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.